Wednesday, 18 April 2012

என் நெஞ்சிலே ஒத்தடம்
மைசூரில் மானச கங்கோத்ரியில்
மரமே உதிர்ந்து விட்டது போல்
சாலையெல்லாம் கொட்டிக் கிடந்த
கொன்றை மலர் விரித்திருந்த
மஞ்சள் பாவாடை மீது
கால் செருப்புக்குக் கூட
நோவாதவாறு உன்
சிவந்த பாதம் நடந்து
வந்த மிருது மென்மை என் நெஞ்சிலே
மெத்து மெத்தென்று ஒத்தடம் தந்து
கந்தர்வனாக்கியது கணப்பொழுது
 வையவன்

No comments:

Post a Comment