Wednesday, 18 April 2012

Gun and Men

ஒரு துப்பாக்கியை வடிவமைக்கும்போது
குண்டு உட்காரக் குழியில்
அதற்கு சௌகர்யமான வடிவ வசதி
செய்து தந்து விடுகிறீர்கள்
புல்லட்டை வார்த்தெடுக்கும்போது
அதன் கூர்நுனி
திசுக்களின் சாம்ராஜ்யத்தில்
சரேலென்று ஊடுருவி உறுதியாக இறங்க
சிரத்தை காட்டுகிறீர்கள்
மனித உயிரை வளர்ப்பதாக
ப்
சொல்லி
ப் பணியாற்றும்போது தான்
பல விஷயங்களை ஏனோ
மறந்து போகிறீர்கள் இயல்பாகவே!

வையவன்

No comments:

Post a Comment